சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி புன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே.