சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடும் ஒன்றியுடனே நின்றமரர் என்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான் துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக் கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் நின்றகயி லாயமலையே.