செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந் தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.