எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி மண்ணகத் தைவர் நீரில் நால்வர்தீ யதனில் மூவர் விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.