எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும் நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.