ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார் வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே