ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால் மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக் காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவோர் வார்சடையை நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே.