உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார் நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.