உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ் செற்றார்திரு மேனிப்பெரு மானுர்திருச் சுழியல் பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங் கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.