உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.