போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக் காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே