- முதற்குறள் வாத நிராகரணம் (1898)
- சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
- துகளறு போதம், உரை (1898)
- முனிமொழிப்ப்ரகாசிகை (பாடகள்) (1899)
- வேதாந்த மத விசாரம் (1899)
- வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
- திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
- சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
- ஞானசாகரம் மாதிகை (1902)
-
முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903) - பட்டினப்பாலை (1906)
- பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
- சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
- சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
- சிந்தனைக் கட்டுரைகள் (1908)
- Oriental Mustic Myna Bimonthly (1908-1909)
- மரனத்தின்பின் மனிதர் நிலை (1911)
- குமுதவல்லி: நாகநாட்டரி (புதினம்) (1911)
- சாதி வேற்றுமையும் போலி சைவரும் (1913)
- பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
- கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
- அறிவுரைக் கொத்து (1921)
- யோக நித்திரை: அறிதுயில் (1922)
- வேளாளர் நாகரிகம் (1923)
- மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
-
மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930) - மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
- சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
- சிறுவற்கான செந்தமிழ் (1934)
- தொலைவில் உணர்தல் (1935)
- மாணிக்க வாசகர் மாட்சி (1935)
- Ocean of Wisdom, Bimonthly(1935)
- முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் (1936)
- Tamilian and Aryan form of Marriage (1936)
- தமிழ் நாட்டவரும் மேல்நாட்டாவரும் (1936)
- இந்தி பொது மொழியா ? (1937)
- Ancient and Modern Tamil Poets (1937)
- திருவாசக விரிவுரை (1940)
- Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
- தமிழர் மதம் (1941)
- திருக்குறள் ஆராய்ச்சி (1951)
- மாணிக்க வாசகர் வரலாறு (1952)
- அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
- மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
- இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
- சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
- சிவஞான போத ஆராய்ச்சி (1958)
- பழந்தமிழ்க் கொளகையே சைவ சமயம் (1958)
- கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
- Can Hindi be a lingua Franca of India? (1969)
- அறிவுரைக் கோவை (1971)
- உரைமணிக் கோவை (1972)
- கருத்தோவியம் (1976)
- மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்)
(1977)
மறைமலை அடிகள்
மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், மேலும் சிறப்பாக அவர் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவருக்குப் பின் 4 ஆண் சகோதரர்களும் (திருஞான சம்பந்தம், மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர்) 2 பெண் சகோதரர்களும் (நீலாம்பிகை, திரிபுரசுந்தரி ஆகியோர்) பிறந்தனர். இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோண்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோண்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம். 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார்.
மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், மேலும் சிறப்பாக அவர் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
மயிலாடன் அவர்கள் "விடுதலை" 15-7-2008 இதழில் எழுதிய கட்டுரைமறைமலை அடிகள் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது. கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர். சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர். தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர். அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார். இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்! குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.
