மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.