மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர் கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர் முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார் வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.